SELANGOR

பத்தாங்காலியில் சித்தம் வியாபாரத் தளவாடங்கள் வழங்கும் நிகழ்ச்சி

பத்தாங்காலி, ஜூலை 7:

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் இந்திய வணிகர்களுக்கான சிலாங்கூர் இந்தியர் தொழில் ஆர்வலர் மையம் (சித்தம்) ஏற்பாட்டில் உலு சிலாங்கூர் மாவட்ட ரீதியில் வியாபாரத் தளவாடங்கள் வழங்கும் நிகழ்ச்சி பத்தாங்காலி தாமான் வாவாசான் பொது மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. 36 சிறு  வணிகர்கள் இத்திட்டத்தின் வழி பயனடைந்தனர். உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன் லியாவ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

சிலாங்கூர் மாநில இந்திய சமுதாய தலைவர்கள், உலு சிலாங்கூர் மாவட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற அலுவலக அதிகாரிகள் ஆகியோர் வணிகர்களின் விண்ணப்பங்கள் சரியான முறையில் கிடைக்க உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Pengarang :