NATIONAL

பிகேபிபி: 20 வணிக வளாகங்கள் எஸ்ஓபியை பின்பற்றவில்லை !!!

ஷா ஆலம், ஜூலை 5:

உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் நலன் அமைச்சு 20 வணிக வளாகங்கள் மீது  சோதனை நடத்திய போது சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்றி நடக்கவில்லை  என்று மூத்த அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். மீட்பு நிலை நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிபி) காலகட்டத்தில் நாடு முழுவதும் மொத்தம் 1,284 வணிக வளாகங்கள் மீது திடிர் சோதனை செய்யப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

” சோதனை நடத்தப்பட்ட 19 வளாகங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. ஒரு கடைக்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது. 1,264 கடைகள் சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்றி நடந்தார்கள்,” என்று தமது அறிக்கையில் இஸ்மாயில் சப்ரி கூறினார்.


Pengarang :