போக்குவரத்து மற்றும் கூட்டம் அதிகம் இருக்கும் பொது இடங்களில் முகக்கவரியை ஆகஸ்ட் 1 தொடங்கி கட்டாயமாக அணிய வேண்டும் என்று அரசாங்கம் புதிய நடைைமுறையை அறிமுகப்படுத்துகிறது. இருப்பினும், அதன் அமலாக்க நடவடிக்கைகள் அரச மலேசிய காவல்துறையை பொருத்தது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி தெரிவித்திருக்கிறார்.
”கட்டாயம் என்று கூறியப் பின் விதிமுறைய மீறினால், கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும், அதன் அமலாக்கம் அரச மலேசிய போலீஸ் படையை பொருத்தே இருக்கிறது.” என்று அவர் கூறினார். இருப்பினும், தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டம், (சட்டம் 342)-டின் கீழ் குற்றம் செய்யப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படும்.