ஷா ஆலம், ஜூலை 13:
சிலாங்கூர் மாநிலத்தில் வீட்டு விலைகள் கட்டுப்பாட்டில் இருக்கும் படி மாநில அரசாங்கம் உறுதி செய்யும் எனவும் மக்கள் வீடுகளை வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும் என டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். சிலாங்கூர் மாநில அரசாங்க நிர்வாகம் வீடமைப்பு கொள்கையை விலை கட்டுப்படுத்தப்பட்ட வீடுகள் மற்றும் பொதுவான வீடுகள் என இரண்டாக பிரித்துள்ளதாக கூறினார்.
” சிலாங்கூர் சொகுசு வீடுகள் என்ற கொள்கை கிடையாது. மலிவு விலை வீடுகள் அல்லது நடுத்தர விலை வீடுகள் அனைத்தும் கட்டுப்படியான விலை அடிப்படையில் உள்ளது,” என்று செமந்தா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் டாரோயா அல்வி கேள்விக்கு பதில் அளித்த போது இவ்வாறு அமிருடின் ஷாரி பேசினார்.