NATIONAL

மலேசியாகினி வழக்கை அட்டர்னி ஜெனரல் மறுபரிசீலனை செய்ய வேண்டும்- அன்வார்

ஷா ஆலம், ஜூலை 3:

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக வழக்கை எதிர் நோக்கி இருக்கும் மலேசியாகினியின் வழக்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அட்டர்னி ஜெனரலை மக்கள் நீதிக் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார். நீதிமன்றம், மலேசியாகினியின் மனுவை நிராகரித்த முடிவு மலேசியாவில் தகவல் ஊடகங்களுக்கு வழங்கும் சுதந்திரத்தை பறிப்பதாக பிரதிபலிக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மக்களாட்சி தத்துவத்தில் தகவல் ஊடகங்கள் மிகவும் இன்றியமையாத ஒன்றாக அமைகிறது என்ற கூற்றை தற்போதைய தேசிய கூட்டமைப்பு அரசாங்கம் உணர வேண்டும் என்றார்.

” மலேசியாகினியின் வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு மலேசிய நாடு மற்றும் ஜனநாயக மரபுக்கு எதிரான ஒன்றாகவே இருக்கும்,” என்று தமது அறிக்கையில் அன்வார் கூறினார்.


Pengarang :