Haniza Talha melawat Pangsapuri
RENCANA PILIHANSELANGOR

லெஸ்தாரி புத்ரா அடுக்குமாடி வீடுகளை வாங்கியவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் சாவிகள் கிடைக்கும் !!!

ஷா ஆலம், ஜூலை 3:

பூச்சோங் லெஸ்தாரி புத்ரா அடுக்குமாடி வீடுகளை வாங்கியவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் சாவிகள் கிடைக்கும் என சிலாங்கூர் மாநில வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் ஹானிஸா தல்ஹா தெரிவித்தார். கடந்த 19 ஆண்டுகளுக்கு மேலாக கைவிடப்பட நிலையில் இருந்த இந்த வீடமைப்பு திட்டம் திவால் ஆகிய மேம்பாட்டு நிறுவனத்தால் நின்று போனது என்றும் இதில் 360 வீடுகள் அடங்கும் என்றார் அவர்.

” இந்த வீடுகளின் சாவிகள் கிடைக்கும் போது உரிமையாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். நீண்ட காலமாக இதற்கு காத்துக் கொண்டிருந்தனர்,” என்று முகநூலில் பதிவு செய்தார். இந்த வீடமைப்பு திட்டத்தை மறுசீரமைப்பு செய்த நிறுவனம் மற்றும் அடிப்படை வசதிகளை நிர்மாணிக்கும் நிறுவனம் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடியிருக்கும் தகுதிச் சான்றிதழ் கிடைக்க உதவியதாக ஹானிஸா தல்ஹா தெரிவித்தார்.


Pengarang :