ECONOMYPBTSELANGOR

வர்த்தக லைசன்ஸ் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த சிலாங்கூர் அரசு திட்டம்

ஷா ஆலம், நவ 30- கோவிட்-19 பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் வர்த்தக லைசன்ஸ் வழங்கும் திட்டத்தை அடுத்தாண்டில் விரிவுபடுத்த சிலாங்கூர் அரசு திட்டமிட்டுள்ளது

குடும்ப வருமானத்தை பெருக்கி கொள்வதற்கு ஏதுவாக இணையம் வாயிலான வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்வதற்கான திட்டங்களை 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மையமாக கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களுக்கு உதவிப் பொருள்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்களிடையே தொழில் திறனை வளர்ப்பதற்கு ஏதுவாக புதிய பயிற்சி மற்றும் மறு பயிற்சி திட்டங்களை வரைந்து வருவதாகவும் அவர் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக வேலை இழந்தவர்கள் திறன் பயிற்சி பெறுவதிலும் வர்த்தகத்தில் ஈடுபடுவதிலும் முனைப்பு காட்ட வேண்டும் என்றார் அவர்.


Pengarang :