NATIONAL

கோவிட்-19; இன்று புதிதாக  3,585  பேருக்கு நோய்த் தொற்று- 4076 பேர் குணமடைந்தனர்

ஷா ஆலம், ஜன 26- நாட்டில் இன்று 3585 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நேற்று பதிவான 3048 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இது உயர்ந்துள்ளது. புதிய எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 186,849 ஆக அதிகரித்துள்ளது. கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து  4076 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதன் வழி இந்நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 149160 ஆக உயர்ந்துள்ளது. நோய்த் தொற்று இன்னும் தீவிரத் தன்மையும் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 40574  ஆகும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினர். புதிதாக இன்று 11 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்ட வேளையில் இந்நோய் தொற்றினால் ஏற்பட்ட மொத்த மரண எண்ணிக்கை 700 ஆக அதிகரித்துள்ளது என்று அவர் சொன்னார். தீவிர சிகிச்சை பிரிவில் 280 பேர் சிகிச்சை பெற்று வரும் வேளையில் 111 பேருக்கு சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.


Pengarang :