NATIONALPBTSELANGOR

தைப்பூசம்; கோம்பாக் வட்டார சாலைகள் மூடப்படும்

கோலாலம்பூர், ஜன 27- தைப்பூச இரத ஊர்வலத்தை முன்னிட்டு கோம்பாக் மாவட்டத்தில் உள்ள சில சாலைகள் மூடப்படும் என்று கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் அரிஃபாய் தராவே கூறினார்.

தைப்பூசத் முன்னிட்டு வெள்ளி இரத ஊர்வலம் நடைபெறுவதற்கு தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து இச்சாலைகள் மூடப்படுவதாக அவர் சொன்னார்.

பத்து கேவ்ஸ் சுற்று வட்டத்திலிருந்து ஆலய நுழைவாயில் வரையிலான சாலை, எம்.ஆர்.ஆர்.2 சாலையிலிருந்து ஜாலான் பெருசாஹான் செல்லும் வழி, ஜாலான் பெருசஹான் பத்து கேவ்சிலிருந்து பத்து கேவ்ஸ் சுற்று வட்டம் வரையிலான பகுதி, பத்து கேவ்ஸ் ஆற்றின் குளிக்கும் பகுதி ஆகியவையே போக்குவரத்துக்கு மூடப்படும் பகுதிகளாகும் என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

இச்சாலைகளில் அமல்படுத்தப்பட்ட போக்குவரத்து தடை வரும் 29 ஆம் தேதி அதிகாலை 6.00 மணி வரை அமலில் இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

Pengarang :