கோலாலம்பூர், ஜன 28- இன்று தைப்பூச விழாவைக் கொண்டாடும் நாட்டிலுள்ள இந்துக்களுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் பேரரசியார் ராஜா பெர்மைசூரி துவாங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா தம்பதியர் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
இஸ்தானா நெகாராவின் முகநூல் வாயிலாக மாமன்னர் தம்பதியர் இந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இன்றைய தினம் மிகவும் பொருள் பொதிந்த ஒரு தினமாகும். இவ்விழாவை மகிழ்ச்சியோடும் அமைதியான முறையிலும் கொண்டாடும் அனைத்து இந்துக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அவர்கள் கூறினார்.