PBTPENDIDIKANSELANGOR

இம்மாத இறுதியில் பெட்டாலிங் மாவட்டத்தில்- கோவிட்-19 இலவச பரிசோதனை இயக்கம்  கோவிட்-19 இலவச பரிசோதனை இயக்கம் 

ஷா ஆலம், ஏப் 22-  பெட்டாலிங்  மாவட்டத்தில்  கோவிட்-19 இலவச பரிசோதனை இயக்கம் இம்மாத இறுதியில் தொடங்கும் என்று செல்கேர் நிர்வாகி முகமது நோர்  முகமது நாசீர் கூறினார்.

அந்த இலவச பரிசோதனை இயக்கத்தை மேற்கொள்வதற்கான இடம் தற்போது அடையாளம் காணப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

புதிய  தொற்று மையங்கள் குறிப்பாக பள்ளி பணியாளர்கள் மற்றும் மாணவர்களை சம்பந்தப்படுத்திய திரள்கள் உருவாக்கம் காண்பதை தடுக்கும் விதமாக பரிசோதனைத் திட்டத்திற்கான இடத்தை அடையாளம் காண்பதில் கவனம் செலுத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். 

இவ்விவகாரம் தொடர்பில் மாநில, மாவட்ட கல்வித் துறைகள் மற்றும் சிலாங்கூர் மாநில கோவிட்-19 பணிக்குழு ஆகிய தரப்புகளுடன்  விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

இன்னும் ஒரு வார காலத்தில் இலவச பரிசோதனை மேற்கொள்வதற்குரிய இடத்தை நாங்கள் அடையாளம் கண்டு விடுவோம். அதன் பின்னர் பரிசோதனை இயக்கம் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என்றார் அவர்.

பெட்டாலிங் மாவட்டத்தில் 19 பள்ளிகள் மூடப்பட்டதைக் கருத்தில்  கொண்டு அம்மாவட்டத்தில் இலவச  கோவிட்-19 பரிசோதனையை மாநில அரசு மேற்கொள்ளும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று கூறியிருந்தார்.


Pengarang :