கோல சிலாங்கூர், ஏப் 23– இங்குள்ள ஜாலான் கிள்ளான், 2வது மைல் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்திற்கு சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 150,000 வெள்ளி மானியம் வழங்கினார்.
மாநில சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கோல சிலாங்கூர் மாவட்டத்திற்கு இன்று வருகை புரிந்த அவர் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இந்த நிதிக்கான காசோலையை ஆலயத் தலைவர் கண்ணதாசனிடம் ஒப்படைத்தார்.
இங்குள்ள கம்போங் அப்பி அப்பி பகுதியில் இடுகாட்டிற்காக வழங்கப்பட்ட 8 ஏக்கர் நிலத்திற்கு சாலை வசதியை ஏற்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று ஆலய ஆலோசகரும் முன்னாள் கோலா சிலாங்கூர் மாவட்ட மன்ற உறுப்பினருமான திருமூர்த்தி கூறினார்.