ECONOMYPBTSELANGOR

காஜாங், செமினியில் வரும் சனியன்று இலவச கோவிட்- 19 பரிசோதனை இயக்கம்

ஷா ஆலம், மே 6– கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக வரும் சனிக்கிழமையன்று காஜாங் மற்றும் செமினியில்  நடத்தப்படும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கு பெறுமாறு வட்டார மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பண்டார் ரிஞ்சிங் சமூக மண்டபத்திலும் சவுஜானா இம்பியான்  டேவான் செம்பாக்காவிலும் காலை 9.00 மணி தொடங்கி மாலை 4.00 மணி வரை இந்த பரிசோதனை இயக்கம் நடைபெறும் என்று சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழு கூறியது.

இந்த இலவச பரிசோதனை இயக்கத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் செலங்கா செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளும்படி  அக்குழு அறிக்கை ஒன்றின் வாயிலாக கேட்டுக் கொண்டது.

நோய்த் தொற்றைக் கண்டறியும் முயற்சியாக மாநில அரசு இம்மாதம் 8ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 10 ஆம் தேதி வரை தீவிர  பரிசோதனை இயக்கத்தை மேற்கொள்ளவுள்ளது.

நோய்த் தொற்று அபாயம் அதிகம் உள்ள மற்றும் நோய்த் தொற்று உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தங்கள் உடல் நிலை குறித்து அறிந்து கொள்ள இந்த பரிசோதனை இயக்கம் பெரிதும் துணை புரியும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அண்மையில் கூறியிருந்தார்.


Pengarang :