ECONOMYHEALTHNATIONALSELANGOR

நாட்டில் புதிய கோவிட் -19 தொற்றுகள் 4,855 சம்பவங்களாக அதிகரித்துள்ளன,

கோலாலம்பூர், மே 13 – கடந்த 24 மணி நேரமாக நாட்டில் புதிய கோவிட் -19 தொற்றுகள் 4,855 சம்பவங்களாக அதிகரித்துள்ளன, இது நேற்று 4,765 தொற்றுகளாக இருந்தது.

சுகாதார இயக்குநர் ஜெனரல், டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, தனது ட்விட்டர் கணக்கில் ஒரு பதிவில், இந்த காலகட்டத்தில் சிலாங்கூர் தினமும் அதிக எண்ணிக்கையிலான தினசரி தொற்றுகளை 1,783 பதிவு செய்துள்ளதாகவும்  தொடர்ந்து கோலாலம்பூர் (521) மற்றும் ஜொகூர் (467) ஆகியவையும் உள்ளன  என தெரிவித்துள்ளார்.

சரவாக் மற்றும் பினாங்கு தலா 395 தொற்றுகளை பதிவு செய்தன; கிளந்தான் (339); பேராக் (302); கெடா (193); திராங்கானு (148); நெகிரி செம்பிலான் (100); சபா (76); மலாக்கா (67); பஹாங் (56); புத்ராஜெயா (ஒன்பது); லாபுவன் (நான்கு), பெர்லிஸில் தொற்றுகள் எதுவும் பதிவிடப்படவில்லை என தெரிவித்துள்ளார்..

 


Pengarang :