ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

மின் கசிவினால் தீவிபத்து- பந்தாய் மோரிப்பில் 15 கடைகள் சேதம்

பந்திங், மே 4- மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 15 கடைகள் சேதமடைந்தன. இச்சம்பவம், இங்குள்ள பந்தாய் மோரிப்பில் நேற்று மாலை நிகழ்ந்தது.

இத்தீச் சம்பவம் குறித்த தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து பந்திங் மற்றும் தெலுக் பங்ளிமா காராங்கிலிருந்து 14 தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சூப்ரிண்ட். அஜிசான் துக்கிமான் கூறினார்.

தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி இரண்டு மணி நேரத்தில் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக கூறிய அவர், இச்சம்பவம் நிகழ்ந்த போது அக்கடைகளில் 2 கடைகள் மட்டுமே செயல்பட்டு வந்ததாகச் சொன்னார்.

அக்கடைகளுக்கு சுமார் 60 விழுக்காடு பாதிப்பு ஏற்பட்டதோடு வியாபாரத்திற்கு பயன்படுத்தப்படும் குளிர்பதனப் பெட்டி, கரும்பு அரைக்கும் இயந்திரம் உள்ளிட்ட மின்சாரப் பொருள்கள் சேதமுற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்தீவிபத்தில் யாருக்கும் உயிருடற்சேதம் ஏற்படுவில்லை. தீக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு ஆராயப்பட்டு வருகிறது என அவர்


Pengarang :