HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 எண்ணிக்கை இன்று 4,949 ஆக குறைந்தது

ஷா ஆலம், ஜூன் 14- இன்று கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 4,949 ஆக குறைந்தது.  நேற்றை விட இன்று 355 சம்பவங்கள் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்குப் பின்னர் இந்நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆகக்கடைசியாக கடந்த மாதம் 18 ஆம் தேதி 4,865 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக அவர்  சொன்னார்.

வழக்கம் போல் சிலாங்கூர் மாநிலம் 1,523 சம்பவங்களுடன் முதல் இடத்தில் உள்ள வேளையில் சரவா (744), கோலாலம்பூர், (503), ஜொகூர் (430), நெகிரி செம்பிலான் (323) அடுத்த நிலையில் உள்ளன. பினாங்கு மற்றும் கிளந்தானில் தலா 214 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.


Pengarang :