SELANGOR

புத்ரா ஜெயாவில் வேலையாக இருந்தாலும், அஸ்மின் கோம்பாக்கில் சேவையை வழங்கி வருவார்

கோம்பாக், மே 28:

மத்திய அரசாங்கத்தின் புதிய பொருளாதார நலன் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டாலும் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தொடர்ந்து கோம்பாக் நாடாளுமன்ற மக்களுக்கு சேவையை வழங்கி வருவார். கோம்பாக் தாமான் மெலாவாத்தி அல்-ஹிடாயா மசூதியில் நடைபெற்ற நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் மக்களோடு மக்களாக கலந்து கொண்டார்.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியோடு, மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அமிரூடின் ஷாரி, கோம்பாக் செத்தியா சட்ட மன்ற உறுப்பினர் ஹில்மான் இடாம் மற்றும் உலு கிள்ளான் சட்ட மன்ற உறுப்பினர் ஷாரி சுங்கிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Pengarang :