SELANGOR

ஜூன் 19-இல் புதிய சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் நியமனம் !!!

ஷா ஆலம், மே 30:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலிக்கு பதிலாக புதிய மந்திரி பெசாரை ஜூன் 19-இல் நியமனம் செய்யப்பட உள்ளதாக சிலாங்கூர் சுல்தானின் அந்தரங்க செயலாளர் டத்தோ முகமட் மூனிர் பானி கூறினார். இந்த நியமனத்திற்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் மன்னர் சுல்தான் ஷாராஃபூடின் இட்ரிஸ் ஷா ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

”  சிலாங்கூர் மாநில மன்னர் மேன்மை தங்கிய சுல்தான் ஷாராஃபூடின் இட்ரிஸ் ஷா பதவி பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வுக்கு ஆசி வழங்கி உள்ளார். இந்த நியமனம் நோன்பு பெருநாளுக்கு பின்னர் நடைபெறும். கிள்ளான் அலாம் ஷா அரண்மனையின் பாலாய்ரோங் சிரியில் ஜூன் 19, செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கிறது,” தமது அறிக்கையில் முகமட் மூனிர்  குறிப்பிட்டுள்ளார்.

அதே தேதியன்று அஸ்மின் அலி தமது பதவியை துறந்து விடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :