NATIONAL

துணப் பிரதமர்:புதிய மலேசியாவை உருவாக்க மக்களின் கருத்துகளை எதிர்ப் பார்க்கிறோம் !!!

புத்ரா ஜெயா, ஜூன் 10:

புதிய மலேசியாவை உருவாக்க அரசாங்கத்திற்கு பல்வேறு ஆலோசனைகளை தருமாறு மலேசிய நாட்டின் மக்களை துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் அன்புடன் கேட்டுக் கொண்டார். இதன் மூலம் அரசாங்கத்தின் திட்டங்கள் அதன்  நோக்கத்தை அடைய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

”  புதிதாக உதித்துள்ள அரசாங்கம் அனைத்து மலேசியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து நாட்டை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லும். ஆகவே, எல்லோருடைய ஒத்துழைப்பும் மற்றும் ஆதரவும் தேவை,” என்று ரமலான் மாத சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :