SELANGOR

மந்திரி பெசார்: சபாநாயகர் தேர்வு அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து எடுத்த முடிவு!!!

ஷா ஆலம், ஜூன் 26:

சிலாங்கூர் மாநில சட்டசபையின் சபாநாயகர் தேர்வு பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின்  அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து எடுத்த முடிவு என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி கூறினார். இதில் எந்த பிரச்சனையும் எழவில்லை என்றும் பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமூகமாக நடந்து முடிந்தது என்றார்.

”  எந்த ஒரு பிரச்சினையும் இல்லை மாறாக தோழமையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எந்த ஒரு சூழ்நிலையை நாம் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். ஆண்டவன் ஆசியினால் இன்று ஒரே வேட்பாளர் ஒருமித்த குரலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்,” என்று அமிரூடின் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில சட்டசபை சபாநாயகராக செகிஞ்சான் சட்ட மன்ற உறுப்பினர் எங் சுவி லிம் மற்றும் துணை சபாநாயகராக பாயா ஜெராஸ் சட்ட மன்ற உறுப்பினர் முகமட் கைரூடின் ஓத்மான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


Pengarang :