SELANGOR

புதிய பாலம் திறப்பு புஞ்சாக் ஆலம் குடியிருப்பாளர்கள் நிம்மதி

ஷா ஆலம், மார்ச் 14-

புஞ்சாக் ஆலம் இரண்டாவது பாலம் தற்போது பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டதைத் தொடர்ந்து புஞ்சாக் ஆலம் குடியிருப்பாளர்கள் இனி நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் என நம்பப்படுகிறது.

அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களிடம் இருந்து நிறைவான கருத்துகளைத் தாம் பெற்றிருப்பதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு மாநில அரசு தொடர்ந்து முயற்சிக்கும்” என்று அவர் உறுதியளித்தார்.

அதேவேளையில், வரும் மே மாதம் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படும் பி49 மொக்தார் டஹாரி சுற்றுச் சாலை மூலம் அவ்வட்டாரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அமிருடின் குறிப்பிட்டார்.


Pengarang :