உலு சிலாங்கூர், மே 16-
பொது வசதி மற்றும் அடிப்படை வசதிகளுக்கான திட்டங்கள் வழி உலு சிலாங்கூர் மாவட்டம் தொடர்ந்து மேம்பாடடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
பொதுப்பணி துறையின் கண்காணிப்பின் கீழ் 40 மில்லியன் வெள்ளி மதிப்பிலான கட்டமைப்புத் திட்டங்களும் 29.2 மில்லியன் வெள்ளி மதிப்பிலான சாலை மேம்பாட்டுத் திட்டங்களும் இவ்வட்டாரத்தில் மேற்கொள்ளப்படவிருக்கின்றன என்று உலு சிலாங்கூர் மாவட்ட அதிகாரி மூசா ரம்லி கூறினார்.
“11.8 மில்லியன் வெள்ளி செலவில் ராசாவில் பள்ளிவாசல் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதில் 1,500 பேர் பிரார்த்தனை மேற்கொள்ளும் வசதி உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
அதே வேளையில் செரெண்டாவில் 16.5 வெள்ளி செலவில் சமூக நல இலாகாவின் மேம்பாட்டு மையம் ஒன்று கட்டப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.