RENCANASELANGOR

சிலாங்கூரில் 5 மீன் பிடிப்பு இடங்கள்

கிள்ளான், மார்ச் 3-

வலையில் அதிகமான மீன்கள் சிக்குமேயானால் மீன் பிடித்தல் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது யாராலும் மறுக்க முடியாது. அதிலும் அந்த இடம் அமைதியாகவும் அழகாகவும் இருந்தால் சொல்லவும் வேண்டுமா?
சிலாங்கூரில் அதிகமான மீன்பிடிப்பு இடங்கள் உள்ளன. இவை இயற்கை வளங்களையும் பல்வேறு வகையான மீன்களையும் கொண்டுள்ளன. சிலாங்கூர் சுற்றுலா துறை பரிந்துரை செய்துள்ள 5 இடங்களில் போர்க்
கிள்ளான், தஞ்சோங் ஹராப்பானும் அடங்கும்.

‘நம்பிக்கையின் வளைகுடா’ என்றழைக்கப்படும் தஞ்சோங் ஹராப்பான் கிள்ளான் துறைமுகத்தில் அமைந்துள்ளது. போர்க்  கிள்ளான் கோல்ஃப் ரிசோர்டை எல்லையாகக் கொண்டு இது செயல்படுகிறது. பரபரப்புமிக்க கப்பல் முனையம் மற்றும் தொழிற்பேட்டைக்கு மத்தியில் தஞ்சோங் ஹராப்பான் மீன்பிடிப்பு மையம் இயங்குகிறது.


Pengarang :