PBTSELANGOR

நடமாட்ட கட்டுப்பாட்டை மீறிய வர்த்தகருக்கு அபராதம் – எம்பிஎஸ்ஏ

ஷா ஆலம், ஏப்.3-

நடமாட்ட கட்டுப்பாடு ஆணை  காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை மீறி வர்த்தகம் புரிந்த வர்த்தகருக்கு ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) அபராதம் விதித்தது.
இங்குள்ள செக்ஸன் யூ20 வாகன நிறுத்துமிடத்தில் வர்த்தகப் புரிந்த குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட நபர் எம்பிஎஸ்ஏ நடவடிக்கை எடுத்ததாக எது டுவீட்டர் வழி தெரிவித்தது.

“நடமாட்ட கட்டுப்பாட்டை மீறியதற்கான விளைவு இது” என்று அம்மன்றம் கூறியது.
எம்பிஎஸ் ஏ மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது ஊராட்சி மன்ற சட்டத்தின் 171 பிரிவு 109இன் கீழ் 4 அபராத அறிக்கைகள் வெளியிடப்பட்டதாக எம்பிஎஸ்ஏ தெரிவித்தது.


Pengarang :