RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: சிறு தொழில் முனைவர்களுக்கான ரிம 500 நிதிஉதவி மேலும் விரிவாக்கப்படும் !!!

ஷா ஆலம், ஏப்ரல் 15:

சிலாங்கூர் மாநில பரிவு மிக்க ஊக்குவிப்பு திட்டத்தில் ஒன்றான வியாபார உரிமம் பெற்றுள்ள வணிகர்களுக்கான ஒருமுறை வழங்கப்படும் ரிம 500 நிதிஉதவி மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் விவசாய சந்தை, கியோஸ்க், எல்லா வகையான சிறு கடைகள், உணவக தளங்கள் மற்றும் பொதுச் சந்தை ஆகியவை இடம் பெறும் என அவர் கூறினார்.

” இத்திட்டத்தில் 20 மார்ச் 2020 வரை  வணிக உரிமம் பெற்றுள்ள வணிகர்கள் பயன் அடையலாம். இருந்தாலும் மாநில அரசாங்கம் மேற்கண்ட விண்ணப்பங்கள் 7 ஜூன் 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது,” என்று அமிருடின் ஷாரி கூறினார். மாநில அரசாங்கம் மொத்தம் 80,000 வணிகர்கள் மற்றும் உரிமம் பெற்றுள்ள சிறுதொழில் வியாபாரிகளை இலக்காக கொண்டிருப்பதாகவும் ஒவ்வொருவரும் ரிம 500-ஐ உதவிநிதியாக பெறுவர்.

 


Pengarang :