ஷா ஆலம், ஜூலை 17:
நேற்றைய சட்டமன்றக் கூட்டத் தொடரில் பழுதான குடிநீர் குழாய்களை மாற்றும் சட்ட மசோதாவை நிறைவேற்றி உள்ளது. புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷாகாரன் கொண்டு வந்த தீர்மானத்தை பெரும்பாலான சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். இதில் பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் ஜாமாலியா ஜாமாலுடினும் அடங்குவார்.
சிலாங்கூர் மாநிலத்தில் குடிநீர் குழாய்கள் உடைந்து வீடமைப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் தொழில்துறை பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடைபட்டுள்ளது.