ஷா ஆலம், ஜூலை 29:
சபாக் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அமாட் முஸ்தாயின் ஓத்மான் தொடர்ந்து சிலாங்கூர் மாநில பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி (பாக்காத்தான்) அரசாங்கத்தை ஆதரிப்பார் என்று மாநில பாக்காத்தான் தலைவர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
” இது வரையில் அமாட் முஸ்தாயின் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கத்தை ஆதரித்து வருகிறார். நானும் ஏற்கனவே அவரிடம் பேசியது மற்றும் எனது அதிகாரிகளும் நடத்திய தொலைபேசி உரையாடலில் வழி அவர் இன்னும் பாக்காத்தான் அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்குவார்,” என மாநில நடவடிக்கை அறையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்தின் நிலைத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவை தொடர்ந்து மேலோங்க அமாட் முஸ்தாயின் ஆதரவு மிகவும் இன்றியமையாதது என்று அவர் மேலும் தெரிவித்தார். இதற்கு முன்பு தேசிய அமானா கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் முகமட் ஹாத்தா ரம்லி, கட்சியின் ஒழுங்கை மீறியதாக அமாட் முஸ்தாயினை கட்சியை விட்டு நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.