கோலா லம்பூர், ஜூலை 30:
இனநாம் சட்டமன்ற உறுப்பினரான கென்னி சுவா தேக் ஓ மக்கள் நீதிக் கட்சியில் (பிகேஆர்) இருந்து நீக்கப்பட்டதாக அதன் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் டத்தோ அமாட் காசிம் தெரிவித்தார். முன்னாள் சபா முதலமைச்சர் டான்ஸ்ரீ மூசா அமானை ஆதரித்த சட்டமன்ற உறுப்பினர்களில் கென்னி சுவாவும் இணைந்து செயல்பட்டதால் கட்சியின் விதிமுறைகளை மீறியதாக உடனடி நீக்கம் செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
சபா மாநில பிகேஆர் கட்சியின் தலைமைத்துவத்துடன் உறுதிப் படுத்திய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது எனவும் டத்தோ ஸ்ரீ ஷாபி அப்டாலின் வாரிசான் தலைமையிலான ஆட்சி கவிழ்வதற்கு உறுதுணையாக இருந்த காரணத்தால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அமாட் காசிம் தமது அறிக்கையில் அவர் கூறினார்.