Uncategorized @ta

இன்று 62 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர், செப் 7- நாட்டில் இன்று 62 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனுடன் சேர்த்து கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,459 ஆக அதிகரித்துள்ளது.

ஒன்பது பேர் இந்நோயிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் வழி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,124 ஆகும்  என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினர்.

இந்நோய்த் தொற்றுக்காக தற்போது 207 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் ஆறு பேர் அனுமதிக்கப் பட்டுள்ளது வேளையில் அவர்களில் நால்வருக்கு சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.

இன்று பதிவான 62 சம்பவங்களில் 56 உள்நாட்டில் பரவியவை எனக் கூறிய அவர், இதர ஆறு சம்பவங்கள் இறக்குமதியானவை என்றார்.

இன்று மரணச் சம்பவங்கள் பதிவாகவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்நோய் கண்டு 56 உள்நாட்டினரில் 30 பேர் மலேசியர்கள் என்றும் எஞ்சியோர் அந்நிய பிரஜைகள் என்றும் நோர் ஹிஷாம் சொன்னார். இவற்றில் 50 சம்பவங்கள் சபா, லஹாட் டத்து, பெந்தேங் தொற்று மையத்தை சேர்ந்தவை என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :