ஷா ஆலம், நவ 24- தற்காலிக லைசென்ஸ் விநியோக திட்டத்தின் வழி சிலாங்கூர் அரசு பொதுமக்களுக்கு குறிப்பாக சிறு வியாபாரிகளுக்கு உதவுவதில் முன்னிலை வகிக்கிறது.
தற்காலிக வர்த்தக லைசென்ஸ் பெற்றவர்கள் அடுத்தாண்டு டிசம்பர் மாதம் வரை வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸி ஹான் கூறினார்.
இத்திட்டத்தில் மேலும் அதிகமான வர்த்தகர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கு ஏதுவாக பொருத்தமான மற்றும் பாதுகாப்பான வர்த்தக இடங்களை அடையாளம் காணும் பணியில் ஊராட்சி மன்றங்கள் தற்போது ஈடுபட்டு வருவதாக அவர் சொன்னார்.
கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் தடையற்ற வியாபார மண்டல திட்டம் உருவாக்கம் காண்பதற்கு முன்னதாகவே நாம் இதனை அமல்படுத்தி விட்டோம். வியாபாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தை மற்ற மாநிலங்களும் அமல்படுத்தும் என நம்புகிறோம் என்றார் அவர்.
கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு உதவும் வகையில் 500 வெள்ளியை உதவித் தொகையாக வழங்கும் திட்டத்தையும் சிலாங்கூர் அரசு அமல்படுத்தி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது தவிர, மாநில அரசு தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகள் வியாபார கட்டணங்களுக்கு விலக்களித்து வந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
லைசென்ஸ் இல்லாத சிறு வியாபாரிகளுக்கு தற்காலிக லைசென்ஸ் வழங்கும் திட்டத்தை சிலாங்கூரில் உள்ள ஊராட்சி மன்றங்கள் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் அமல்படுத்தி வருகின்றன.
இந்நடவடிக்கை பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறுவோர் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள உதவும் அதே வேளையில் நாட்டின் பொரு