ACTIVITIES AND ADSNATIONALPress Statements

கோவிட் 19 நோய்தொற்றுக்கு ஊடே- சரவாக் மாநில தேர்தலா?

கூச்சிங், மே 15 –சரவாக் மாநில சட்டமன்றத்தை கலைப்பது மற்றும் மறு தேர்தலுக்கான தேதிகள் குறித்த முடிவை, கபுங்கன் பார்ட்டி சரவாக் (ஜி.பி.எஸ்) யாங் டி-பெர்த்துவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் சரவாக் துன் அப்துல் தைப் மஹ்மூட் யாங் டிபெர்டுவா நெகிரி ஆகியோரின் ஞானத்திற்கு விட்டு விடுவர்.

ஜி.பி.எஸ் பொதுச்செயலாளர் டத்தோ ஶ்ரீ அலெக்சாண்டர் நாந்தா லிங்கி, மாநில அரசியலமைப்பின் கீழ், தற்போதைய டி.யு.என் பதவிக் காலம் ஜூன் 6 ஆம் தேதியுடன் முடிவடையும்,  இது முதல் கூட்டத்தின் தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் ஆகும்.

எவ்வாறாயினும், அவசரகால (அத்தியாவசிய அதிகாரங்கள்) கட்டளை 2021 ன் படி மாநில அரசியலமைப்பின் கீழ் இந்த ஏற்பாடு எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்றார்.

அப்துல் தைபுடன் கலந்தாலோசித்த பின்னர் அல்-சுல்தான் அப்துல்லா குறிப்பிடும் எந்த தேதியிலும் மாநில சட்டமன்றத்தை கலைக்க தீர்மானிப்பதற்கான அவர்களின் ஞானத்தில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.

“இருப்பினும் முதல்வர் (டத்துக் பாட்டிங்கி அபாங் ஜோஹரி துன் ஓபன்) அல்-சுல்தான் அப்துல்லாவை சென்று காண்பார் என்று, அவர் இன்று ஜி.பி.எஸ்ஸின் உச்ச மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தற்போதைய  கோவிட் 19 சூழ்நிலையில், மக்களின் வாழ்க்கையில் ஜி.பி.எஸ் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்று நாந்தா மேலும் கூறினார்.

 


Pengarang :