MEDIA STATEMENTNATIONAL

நாட்டில் இன்று 5,566 கோவிட்-19  சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், ஜூன் 8– நாட்டில் இன்று  கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,566 ஆக பதிவானது. நாட்டில் நோய்த் தாக்கம் சற்று தணிந்து வருவதை இது காட்டுகிறது.

சிலாங்கூரில் இந்த எண்ணிக்கை 1,524 ஆக பதிவானதாக  சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் இதுவரை 627,652 பேர் இந்நோய்த் தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாநில வாரியாக வருமாறு-

சபா (350), கூட்டரசு பிரதேசம் (466). ஜொகூர் (456), சரவா (707), பினாங்கு (185). நெகிரி செம்பிலான்(505), கிளந்தான் (204). பேராக் (255). கெடா (148), மலாக்கா (314), பகாங் (157), திரங்கானு (106), லபுவான் (191), புத்ரா ஜெயா (27), பெர்லிஸ் (1).


Pengarang :