ஷா ஆலம், ஜூன் 12– நாட்டில் கோவிட்-19 சம்பவங்கள் நேற்றை விட சுமார் 1,000 குறைந்து 5,793ஆக பதிவானது. நேற்று பதிவான சம்பவங்களின் எண்ணிக்கை 6,849 ஆகும்.
சிலாங்கூரில் நேற்று 2,558 ஆக இருந்த கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை இன்று 1,582 ஆக குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
நாட்டில் இதுவரை 652,204 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளான வேளையில் சிலாங்கூரில் இந்த எண்ணிக்கை 212,985 ஆக உயர்ந்துள்ளது என்றார் அவர்.
மாநில வாரியாக நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு-
நெகிரி செம்பிலான் (618), சரவா (569), கோலாலம்பூர் (559), ஜொகூர் (504), சபா (378), கிளந்தான் (337), லபுவான் (250), பேராக் (218), பினாங்கு (198), மலாக்கா (178), கெடா (171), பகாங் (121), திரங்கானு (82), புத்ரா ஜெயா (23), பெர்லிஸ் (5).