ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

புக்கிட் அந்தாராபங்சா தொகுதியில்  அடுத்த வாரம் தடுப்பூசி இயக்கம்

அம்பாங், ஜூன் 28–  புக்கிட் அந்தாராபங்சா தொகுதியில் அடுத்த வாரம் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் இயக்கம்  மேற்கொள்ளப்படும். 

இந்த இயக்கம் தொடர்பான அறிவிப்பை நேற்று அங்கு நடைபெற்ற கோவிட்-19 இலவச பரிசோதனை இயக்கத்தின் போது தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுஸானா ஷாருடின் கூறினார்.

அத்தொகுதி மக்களுக்கு சினோவேக் வகை தடுப்பூசியைச் செலுத்தும் பணி அடுத்த மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் அம்பாங், அகமது ரசாலி மண்டபத்தில் நடைபெறும் என்று அவர் கூறினார்.

சினேவேக் தடுப்பூசியைப்  பெற விரும்புவோர் புக்கிட் அந்தாராபங்சா தொகுதி சேவை மையத்தை தொடர்பு கொள்ளும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

மூத்த குடிமக்கள் உதவித் திட்டம், கிஸ் எனப்படும் அன்னையர் பரிவுத் திட்டம் மற்றும் சுகாதார பராமரிப்புத் திட்டம் ஆகியவற்றில் பதிவு பெற்றவர்களுக்கு இந்த தடுப்பூசி திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்று இங்கு நடைபெற் உலு கிளாங் மற்றும் புக்கிட் அந்தாராபங்சா தொகுதி நிலையிலான மூன்றாம் கட்ட கோவிட்-19 இலவச பரிசோதனை இயக்கத்தின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :