ஷா ஆலம், ஜூன் 29- சிலாங்கூர் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி முதல் ஜூலை 13 ஆம் தேதி வரை கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படவுள்ளது.
கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படும் மாவட்டங்கள் வருமாறு-
- சி.எல்.கியு. கமுடா கார்டன்ஸ், குண்டாங் ஜெயா, கோம்பாக்.
– இங்கு கடந்த 14ஆம் தேதி முதல் 57 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
- தாமான் மூர்னி, சிப்பாங்
– இங்கு கடந்த ஒரு வார காலத்தில் 36 நோய்த் தொற்று சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
- பங்சாபுரி ஸ்ரீ ஆயு, செக்சன் 4, பண்டார் பாரு பாங்கி
– இப்பகுதியில் கடந்த ஒரு மாத காலத்தில் 205 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- சி.எல்.கியு. ஜொஹான் செத்தியா, கம்போங் ஜொஹான் செத்தியா, கிள்ளான்
-இங்கு கடந்த 12 நாட்களில் 156 கோவிட்-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.