ECONOMYHEADERADHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் மாநிலத்தின் நான்கு  மாவட்டங்களில் பி.கே.பி.டி. அமல்

ஷா ஆலம், ஜூன் 29- சிலாங்கூர் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி முதல் ஜூலை 13 ஆம் தேதி வரை கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படவுள்ளது.

கடுமையாக்கப்பட்ட  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படும் மாவட்டங்கள் வருமாறு-

  1. சி.எல்.கியு. கமுடா கார்டன்ஸ், குண்டாங் ஜெயா, கோம்பாக். 

– இங்கு கடந்த 14ஆம் தேதி முதல் 57 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

  1. தாமான் மூர்னி, சிப்பாங்

– இங்கு கடந்த ஒரு வார காலத்தில் 36 நோய்த் தொற்று சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

  1. பங்சாபுரி ஸ்ரீ ஆயு, செக்சன் 4, பண்டார் பாரு பாங்கி

– இப்பகுதியில் கடந்த ஒரு மாத காலத்தில் 205 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  1. சி.எல்.கியு. ஜொஹான் செத்தியா, கம்போங் ஜொஹான் செத்தியா, கிள்ளான்

-இங்கு கடந்த 12 நாட்களில் 156 கோவிட்-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

 


Pengarang :