ஷா ஆலம், ஜூலை 7– நாட்டில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த பட்ச எண்ணிக்கையில் இருந்து வருகிறது. இன்று 7,097 சமபவங்கள் பதிவானதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்தில் 3,119 பேருக்கு நோய்த் தொற்று உள்ளது கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
நேற்று நாட்டில் 7748 கோவிட் சம்பங்கள் பதிவான வேளையில் சிலாங்கூரில் நோய்த் தொற்று உள்ள 3,260 பேர் அடையாளம் காணப்பட்டனர். இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் மொத்தம் 799,790 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூரில் 1,005 பேரும், நெகிரி செம்பிலானில் 788 பேரும் மலாக்காவில் 358 பேரும், சரவாவில் 289 பேரும் பகாங்கில் 258 பேரும் ஜொகூரில் 224 பேரும், கெடாவில் 198 பேரும் இந்நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.