ஷா ஆலம், ஜூலை 29- தடுப்பூசி பெறுவதற்கு பி.பி.வி. எனப்படும் தடுப்பூசி மையங்களுக்குச் செல்ல கிராப் வாடகை கார்களை பயன்படுத்துவோருக்கு 20 வெள்ளி கட்டணக் கழிவை வழங்கும் சிலாங்கூர் அரசின் திட்டத்திற்கு நேற்று வரை 8,500 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
அவற்றில் ஏறக்குறைய 7,000 விண்ணப்பங்கள் கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி வரை அங்கீகரிக்கப்பட்டதாக எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்தின் சமூக கடப்பாட்டு பிரிவின் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் தெரிவித்தார்.
அதே சமயம், விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளை சேர்ந்த சுமார் மூவாயிரம் பேர் கட்டணக் கழிவு வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி மையங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பெரும்பாலான விண்ணப்பத்தாரர்கள் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். இவர்கள் தொழில் நுட்ப வசதிகளை அறிந்துள்ளதோடு கிராப் வாடகைக் கார் சேவை கணக்கையும் கொண்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடமிருந்து அமோக ஆதரவு கிடைத்துள்ளது. முதல் தடுப்பூசியைப் பெறும் போது இந்த கட்டணக் கழிவை பெறுவதற்கான வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு இரண்டாது தடுப்பூசியின் போது வாய்ப்பு வழங்கும் வகையில் இத்திட்டத்தில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
இந்த கட்டண கழிவுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் www.platselangor.com என்ற அக்கப்பக்கத்திற்கு Inistiatif MBI Bisnes Amal சென்று என்ற வார்த்தையை சொடுக்கும்டி அவர் கேட்டுக் கொண்டார்.