ஆயுதப்படை நிர்மாணிக்கும் கள மருத்துவமனை புதன்கிழமை கிள்ளான் மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்படும்

ஷா ஆலம், ஆக 1- கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை வளாகத்தில் ஆயுதப்படை நிர்மாணித்து வரும் தற்காலிக கள மருத்துவமனை வரும் புதன்கிழமை மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். 

அந்த மருத்துவமனையின் நிர்மாணிப்பு பணிகள் நேற்று நள்ளிரவு வரை 40 விழுக்காடு பூர்த்தியானதாக மருத்துவமனை நிர்வாகம் முகநூல் வாயிலாக வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

அந்த கள மருத்துவமனையின் நிர்மாணிப்பு பணிகள் திட்டமிடப்பட்டதைக் காட்டிலும் விரைவாக மேற்கொள்ளப்படுதாகவும் வரும் 4 ஆம் தேதியன்று பயன்பாட்டிற்கு அது மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவ்வறிக்கை தெரிவித்தது.

Pengarang :