ECONOMYHEALTHNATIONALPBT

இன்று கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு 17,150 பேர் பாதிப்பு- சிலாங்கூரில் 6,326 சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், ஆக 1– நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று நேற்று அதிகபட்சமாக 17,786 சம்பவங்களைப் பதிவு செய்த வேளையில் இன்று அந்த எண்ணிக்கை 17,150 ஆக குறைந்த து.

சிலாங்கூரில் நேற்று 6,400 இருந்த நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 6,326 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கோலாலம்பூரில் நோய்த் தொற்று எண்ணிக்கை 1,962 லிருந்து இன்று 2,086 ஆக உயர்வு கண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கெடா, ஜொகூர், சபா ஆகிய மாநிலங்கள் முறையே 1,511, 1,045 மற்றும் 1,002 சம்பவங்களைப் பதிவு செய்த து.

இதர மாநிலங்களில் நோய் தொற்று எண்ணிக்கை வருமாறு-

நெகிரி செம்பிலான் (809), பினாங்கு (752), பேராக் (693), மலாக்கா (686), பகாங் (676), சரவா (578), கிளந்தான் (459), திரங்கானு (429), புத்ராஜெயா (72), பெர்லிஸ் (21), லபுவான் (5).


Pengarang :