சிலாங்கூரில்  70,000 பேருக்கு இலவச இணைய தரவு வசதி

ஷா ஆலம், ஆக 4- சிலாங்கூரிலுள்ள சுமார் எழுபதாயிரம் பேருக்கு இலவச இணைய தரவு சேவை ஓராண்டு காலத்திற்கு வழங்கப்படும். என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்நோக்கத்திற்காக அவர்களுக்கு இணைய தரவு வசதிகள் கொண்ட “‘சிம்“ கார்டுகள் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

டியூஷன் ராக்யாட் திட்ட பங்கேற்பாளர்கள், யாயாசான் சிலாங்கூர் அறவாரியத்தில் கல்விக் கடனுதவி பெற்றவர்கள், சிலாங்கூர் இஸ்லாமிய பல்கலைக்கழகம் மற்றும் யுனிசெல் பல்கலைக்கழகத்தில் பயில்வோருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில தொழில்திறன் மேம்பாட்டு மையத்தில் பயிலும் மாணவர்கள், இணையம் வாயிலாக வணிகம் மேற்கொள்வோர் மற்றும் விவசாயிகளும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப் பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :