ECONOMYHEALTHNATIONAL

சிலாங்கூரில் நோய்த் தொற்று 1,365 ஆக குறைந்தது- நாடு முழுவதும் 14,345 பேர் பாதிப்பு

ஷா ஆலம், செப் 20- சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணக்கை இன்று 1,365 ஆக குறைந்தாக சுகாதார அமைச்சு கூறியது.

அதே சமயம் நாட்டில் நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 14,345 ஆக பதிவானதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

சரவா மாநிலத்தில் நோய்த் கண்டவர்கள் எண்ணிக்கை மீண்டும் உயர்வு கண்டு 3,611 ஆக ஆன வேளையில் ஜொகூரில் 1,598 பேரும் சபாவில் 1,255 பேரும் பினாங்கில் 1,170 பேரும் பேராக்கில் 1,090 பேரும் கிளந்தானில் 1.050 பேரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இதர மாநிலங்களில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு- கெடா (967), திரங்கானு (804), பகாங் (779), கோலாலம்பூர் (307), மலாக்கா (162), நெகிரி செம்பிலான் (125), பெர்லிஸ் (51), புத்ரா ஜெயா (11), லபுவான் (0)


Pengarang :