ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19: நாட்டில் இன்று 15,759 சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், செப் 21- நாடு முழுவதும் இன்று 15,759 கோவிட்-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன. நேற்றைவிட இன்று இந்த எண்ணிக்கை சற்று உயர்வுக் கண்டுள்ளது. 

சிலாங்கூரில் நேற்று 1,365  ஆக இருந்த கோவிட்-19 எண்ணிக்கை இன்று சற்று உயர்ந்து 1,934 ஆக ஆகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

சரவா மாநிலத்தில் மிக அதிகமாக 3,732 சம்பவங்கள் பதிவானதாக முகநூல் வாயிலாக வெளியிட்ட பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாநில வாரியாக நோய் கண்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-

ஜோகூர் – 1,959
பினாங்கு – 1,417
கிளந்தான்– 1,338
சபா– 1,291
பேராக் – 1,184

கெடா– 786
பகாங் – 707
திரங்கானு – 592
கோலாலம்பூர் – 359

மலாக்கா – 264
நெகிரி செம்பிலான் – 127
லபுவான்– 12
புத்ரா ஜெயா – 34
பெர்லிஸ் – 23

Pengarang :