கோலாலம்பூர், அக் 14- நாட்டில் நேற்று வரை 90.9 விழுக்காட்டுப் பெரியவர்கள் அல்லது 2 கோடியே 12 லட்சத்து 90 ஆயிரத்து 960 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.
மேலும், 94.9 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 22 லட்சத்து 30 ஆயிரத்து 828 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.
நேற்று 207, 520 பெரியவர்கள் மற்றும் இளையோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 4 கோடியே 62 லட்சத்து 52 ஆயிரத்து 254 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இது தவிர, 12 முதல் 17 வயதான பதின்ம வயதினரில் 14.4 விழுக்காட்டினர் அல்லது 453,906 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.
மேலும், 75.9 விழுக்காட்டினர் அல்லது 23 லட்சத்து 90 ஆயிரத்து 062 இளையோருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.