HEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் புதிதாக 7,420 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், அக் 15- இன்று நாட்டில் 7,420 கோவிட்-19  நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவானதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நேற்று  நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 8,084 ஆக இருந்ததாக சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 77 ஆயிரத்து 033 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :