ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் 93.8 விழுக்காட்டு பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர்,அக் 18- நாட்டில் நேற்று நள்ளிரவு மணி 11.59 வரை மொத்தம் 2 கோடியே 19 லட்சத்து 60 ஆயிரத்து 911 பெரியவர்கள் அல்லது 93.8 விழுக்காட்டினல் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

இதே காலக்கட்டத்தில் 97.2 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 27 லட்சத்து 45 ஆயிரத்து 310 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் அகப்பக்கமான கோவிட்நாவ் கூறியது.

நேற்று பெரியவர்கள் மற்றும் 12 முதல் 17 வயதான இளையோர் உள்பட 134,180 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 78 லட்சத்து 38 ஆயிரத்து 886 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே இலக்காகக் கொள்ளப்பட்ட 2,662 பேருக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. நாட்டில் இதுவரை மொத்தம் 21,477 பேர் இதுவரை ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இதுவரை 806,330 இளையோர் அல்லது 25.6 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். மேலும் 24 லட்சத்து 63 ஆயிரத்து 207 பேர் அல்லது 78.2 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


Pengarang :