ஷா ஆலம், அக் 18- நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றின் இன்றைய எண்ணிக்கை 5,434 ஆக குறைந்தது. நேற்று இந்த எண்ணிக்கை 6,145 ஆக பதிவாகியிருந்ததாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
இதன் வழி நாட்டில் 23 லட்சத்து 96 ஆயிரத்து 121 பேர் இந்நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக அவர் சொன்னார்.
நாட்டில் நேற்று 6,145 கோவிட்-19 சம்பவங்கள் பதிவான வேளையில் கடந்த இரு தினங்களாக இந்த எண்ணிக்கை 7,000 என்ற அளவில் இருந்தது.