ECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONALPBT

கோவிட்-19 எண்ணிக்கை 5,071 ஆக உயர்வு கண்டது

ஷா ஆலம், நவ 2– கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று மறுபடியும் ஐயாயிரத்தை தாண்டியது. அண்மைய சில தினங்களாக நான்காயிரம் என்ற அளவில் இருந்த இந்த எண்ணிக்கை இன்று 5,071 ஆக உயர்வு கண்டது.

நேற்று நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 4,626 ஆக இருந்த தாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இந்த புதிய நோய்த் தொற்றுடன் சேர்த்து கோவிட்-19 நோய்க்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 81 ஆயிரத்து 339 ஆக உயர்வு கண்டுள்ளதாக அவர் சொன்னார்.


Pengarang :