ALAM SEKITAR & CUACAHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

கம்போங் பூங்கா ராயா குவாங், மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது.

குவாங், ஜனவரி 5 – குவாங் சட்டமன்ற தொகுதி ஏற்பாட்டில் ‘ பங்கிட் சிலாங்கூர்’’ உதவி திட்டத்தின் வழி கம்போங் புங்கா ராயாவில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

இன்று, 5/1/2022 காலை 9.00 மணிக்கு, குவாங் டேவான் எம்பி கே கே யில் செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் தலைமையில் வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது.

இதில் குவாங் தலைமை பொங்கலு, சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் புவான் சலசியா டீசா,  இந்திய சமூகத் தலைவர் திரு. மாறன் மற்றும் சுமார் 139 வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கலந்து கொண்டனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு  தலா ரிம 1000 மாநில அரசின் உதவி வழங்கப்பட்டது.


Pengarang :