ECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONAL

100 கடைகளை ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் இ-கூப்பன் முகவர்களாக நியமனம்.

கிள்ளான், பிப் 22: ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் (SSP) செயலியின் மூலம் இ-கூப்பன்களை சீராகச் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக மொத்தம் 100 கடைகள் முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூத்த குடிமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், பதிவு செய்த பார்க்கிங் கூப்பன்களுக்குப் பணம் செலுத்த உதவுவது முகவர் பொறுப்பு என்று உள்ளூர் ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

“இதுவரை, 2019 இல் தொடங்கப்பட்ட SSP செயலியைக் கிட்டத்தட்ட இருவது லட்சம் பயனர்கள் பதிவேற்றியுள்ளனர் மற்றும் நாட்டின் முதலாம் இடத்தில் பார்க்கிங் செயலி இருக்கிறது,” என்று அவர் கூறினார்.

நேற்று கிள்ளான் மாநகரச் சபையின் (MPK) ஹம்சா மண்டபத்தில் நிலையான அபிவிருத்தியை நோக்கிய 2020/2021க்கான கிள்ளான் செஜாத்ரா பாராட்டு விழாவை நிறைவேற்றிய பின்னர் அவர் சந்தித்தார்.

சிலாங்கூர் அரசாங்கம் சுரண்டிப் பயன்படுத்தும் காகிதப் பார்க்கிங் கூப்பன்களின் பயன்பாட்டை ஒழித்து மற்றும் ஆ ஸ்டோர் அல்லது கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யக்கூடிய SSP பயன்பாடு மூலம் மின் கூப்பன்களை அமல்படுத்தியது.

இதுவரை, பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் காகிதப் பார்க்கிங் கூப்பனை மார்ச் இறுதி வரை மாநிலத்தின் அனைத்து உள்ளூர் அதிகார (PBT) நிர்வாகப் பகுதிகளிலும் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

பயன்படுத்தப்படாத காகிதப் பார்க்கிங் கூப்பன்களை மார்ச் மாதத்திற்குப் பிறகு உள்ளூர் அதிகாரி (PBT) அலுவலகங்களில் மீட்டெடுக்கலாம்.

ஏதேனும் கேள்விகள் இருந்தால் 1-700-81-9612 அல்லது மின்னஞ்சல் [email protected] ஐ அழைக்கலாம்.


Pengarang :