ECONOMYHEADERADHEALTHMEDIA STATEMENTNATIONAL

பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர்கள் 387 எஸ்.பி.எம் மாணவர்களுக்கு எழுதுபொருட்களை விநியோகித்தனர்

ஷா ஆலம், பிப் 26: பெர்மாத்தாங் மாநிலச் சட்டமன்ற (DUN) உறுப்பினர் அத்தொகுதியை சார்ந்த 387 மாணவர்களிடம் இதனை ஒப்படைத்தார்.

இந்த மானியம் மலேசியக் கல்விச் சான்றிதழ் (SPM) தேர்வு எழுதும் செகோலா மெனெங்கா கெபாங்சான் (எஸ்எம்கே) திரம் ஜெயா, எஸ்எம்கே அகமா கோல சிலாங்கூர் மற்றும் எஸ்எம்கே பெக்கான் பெர்மாத்தாங் ஆகிய ஐந்தாம் படிவம் மாணவர்களை உள்ளடக்கியதாக மக்கள் பிரதிநிதி கூறினார்.

“கோவிட்-19 பரவலினால்  நிலையான இயக்க நடைமுறைகளை (SOP)க்கு ஒப்ப  SPM வேட்பாளர்களைச் சந்திக்காமலேயே பள்ளி முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகளிடம்  அவை  வழங்கப்படுகின்றன.

அனைத்து வேட்பாளர்களும் சுமுகமாகவும், தெளிவாகவும், சரியாகவும், துல்லியமாகவும் பதிலளிக்க வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன் என ரொசானா ஜைனல் ஆபிடின் இன்று பேஸ்புக் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

SPM 2021 தேர்வு மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 29 ஆம் தேதி முடிவடைய உள்ளது.

மூத்த கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் முகமது ராட்ஸி எம்.டி ஜிடின், உயர் கோவிட்-19 தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, எஸ்ஓபிக்கு இணங்கத் தேர்வு நடத்தப்படும் என்றார்.


Pengarang :